செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் என்று அன்போடு அழைக்கப்படும் திரு. வ.உ.சிதம்பரம் அவர்களின் 146_வது பிறந்த நாளான இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்களும் இருந்தார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து முதல்வர் கூறுகையில், இந்நாளில் திரு. வ.உ.சி அவரை நினைவு கூறுவதில் பெருமை அடைகிறேன் எனக் கூறினார்.


முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் திரு. வ.உ.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார். 1936-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி தனது 64 வயதில் இறைவனடி சேர்ந்தார்.