வாரம் ஒரு முறை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களில் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என சென்னை ஐகோர்ட் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.

 

சமஸ்கிருதம் அல்லது வங்க மொழியில் பாட விருப்பமில்லாதவர்கள் தமிழில் மொழி பெயர்த்து பாடலாம். மேலும் இந்த வந்தே மாதரம் பாடல் திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் பாட வேண்டும்.

 

மாதத்தில் ஒரு நாள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும். பாடலைபாட விருப்பமில்லாதவர்கள் மீது எந்த அழுத்தம் தரக்கூடாது. வந்தே மாதரம் பாடக்கூறி அழுத்தம் தந்தால், அது தேசத்தின் மீதான வெறுப்பை அதிகரிக்கும். 

 

இவ்வாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.