நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில் கூட பெரியாரே மண்ணு தன் என கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டணங்கள் எழுந்து வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனிடம், சீமானின் பெரியார் குறித்த பேச்சு குறித்து  கேள்விக்கு பதிலளித்துள்ளார். 


சென்னையில் கே.நடராசன் படத்திறப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொல். திருமாவளவன், சீமான் ஒரு பொருத்தமில்லாத அரசிலை பேசிக்கொண்டு வருகிறார். தற்போது பெரியாரை பற்றி தமிழகத்தில் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது. 


மேலும் படிங்க: ஜீ தமிழ் நியூஸ் எதிரொலி: "ஆதாரம் காட்டினால் நிலத்தை இலவசமாக தருகிறோம்".. விஜய்க்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் பதில்!


பாசிச அரசியலை நோக்கி செல்கிறார் சீமான்


ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வாக்குகளை பெற இந்த உத்திகளை பின்பற்றுகிறாரா என எண்ணத் தோன்றுகிறது. பெரியார் சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருந்தார். அதாவது பார்பன ஆதிக்கத்திற்கு எதிராக இருந்தார். அப்போது அவரை வீழ்த்த வேண்டும் என பலர் நினைத்தனர். 


தற்போது சீமானும் அதையே நினைகிறார். சீமான் பாசிச அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார். சீமான் பாஜக-வின் கொள்கை பரப்பு செயலாளரா? என்ற கேள்வி எழுகிறது. 


ஆளுநர் பேசியது, தலித்துகளை அபகரிக்கும் சூழ்ச்சி


தொடர்ந்து பேசிய அவர்,  இடதுசாரி இயக்கங்களின் தூண்களாக நின்றவர்கள் அம்பேத்கர் இயக்கங்களுடன் கைகோர்த்து நின்றபோது நமபிக்கையை பெற முடிந்தது. பொதுவாக அம்பேத்கர் இயக்கங்களை சாதிய இயக்கங்களாக ஒதுக்கிய காலம் உண்டு. அதன் மூலம் அம்பேத்கர் இயக்கங்கள் தனிமைப்பட்டு சுருங்கிப்போன வரலாறு உண்டு. வலதுசாரி இயக்கங்கள் இடதுசாரி இயக்கங்களை அழிக்க நினைக்கிறது. 


தேர்தல் நடைமுறையே பாஜக வளர காரணமாக உள்ளாது. இடதுசாரி இயக்கங்களின் அரசியல் கோட்பாடுடன் வலிமையாக உள்ளன. வலதுசாரி இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தில் வலிமையோடு உள்ளன. இடதுசாரி மற்றும் அம்பேத்கர் இயக்கங்களுக்கு இடையேயான இடைவெளியை குறைக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் விசிக இடதுசாரிகளோடு பேணி பாதுகாத்து உள்ளோம். தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆளுநர் பேசியது, தலித்துகளை அபகரிக்கும் சூழ்ச்சி என தெரிவித்தார். 


மேலும் படிங்க: வன்னிய மக்களுக்கு துரோகம் செய்தவர் முக ஸ்டாலின் - அன்புமணி பரபரப்பு பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ