தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் (பிப்.16) சென்னை திரும்புகிறார் என அதிகாரபூரவமான அறிவிப்பு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேமுதிக தலைவர் விஜயகாந்த், மேல் சிகிச்சைக்காக கடந்த, டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி தனது மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவருக்குப் பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விஜயகாந்த் உடல் நலம் தேறி, புதிய உத்வேகத் துடன் அரசியலில் மீண்டும் களமிறங்க வேண்டும் என்று அவரது தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.


இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் (பிப்.16) சென்னை திரும்புகிறார் என அதிகாரபூரவமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மேல் சிகிச்சை முடிந்து பூரண நலம் பெற்ற நிலையில் நாளை மறுநாள் சென்னை திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் சென்னைக்கு வந்த பின் மீண்டும் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. v