வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அதன்படி தற்போது ஒரு வியக்கவைக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


அந்த வகையில், சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஒரு சில பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்ததை காணமுடிந்தது. 


தற்போது மாலை நேரத்தில் சென்னையின் வண்ணாரப்பேட்டை தண்டையார் பேட்டை திருவொற்றியூர் எண்ணூர் போன்ற பகுதிகள் திடீரென மழை பெய்தது. சுமார் 45 நிமிடங்களாக பெய்த மழை காரணமாக விம்கோ மெட்ரோ மேற்புற வழிதடத்தின் மேலிருந்து குற்றாலம் அருவி போல மழை நீர் கொட்டியது. 



இந்த நிலையில் இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பாக தகவலறிந்த மெட்ரோ நிர்வாகம் உடனடியாக விரைந்து இதற்கென குழாய் வழி ஏற்படுத்தி தக்க வழிகளில் அந்த மழைநீரை வெளியேற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். அத்துடன் இந்த வீடியோ வெளியான முதல் பல கிண்டல் அடித்து வருகின்றனர். மேலும் இது மெட்ரோ வழித்தடமா அல்லது குற்றால அருவியா என்று கிண்டல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.