காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பவேறு பகுதியில், வெப்ப சலனம் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதையடுத்து நீர்நிலைகள் கிடு கிடு என உயர்ந்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், காவரியில் நீர்வரத்து வெகுவாக குறைந்தது. 


இந்நிலையில் காவரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒரே நாளில் 6,000 கன அடியில் இருந்து 25,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. படகு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.