மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 14,334 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக அதிகரிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. 


இதையடுத்து, இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,533 கன அடியாக உயர்ந்தது. இந்நிலையில் தற்போதைய தகவலின்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 14,334 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணையின் தற்போது நீர்மட்டத்தின் இருப்பு அளவானது 65.15 அடி, அணையின் நீர் இருப்பு- 20.67 டி.எம்.சி ஆக உள்ளது அடி, அணையின் நீர் இருப்பு - 23.38 டிஎம்சி ஆக உள்ளது. 


இதை தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருவதால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ந்து வருகின்றனர். 


மேலும், இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் அணையின் நீர்வரத்து 35,000 கன அடியை எட்டும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.