தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து வானிலை மையம் கூறுகையில், வங்க கடலில் தென் கிழக்கு பகுதியில், இலங்கைக்கு கிழக்கே, காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி, தமிழக தென் மாவட்டங்களுக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதனால், தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளின் சில இடங்களில் இன்று (டிசம்பர் 21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்த வரை மிதமான மழை அல்லது வறண்ட வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.