சென்னை: திமுக பிரமுகரும், வழக்கறிஞரும், திமுக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக சார்பில் பல தொலைக்காட்சி விவாதங்களில் பிரசன்னா கலந்துகொண்டுள்ளார். தமிழ் மக்களுக்கு பிரபலமான அரசியல் பிரமுகர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரசன்னா சென்னையில் வியாசர்பாடியை அடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது 
மனைவி இன்று அவரது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன. 


பிரச்சன்னா மனைவியின் தற்கொலை தொடர்பான செய்தி வெளிவந்ததும் கொடுங்கையூர் காவல்துறையினர் பிரச்சன்னா மனைவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்படுள்ளது. பிரச்சன்னா மனைவியின் தற்கொலை குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். 



திமுக பிரமுகரான பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து கொடுங்கையூர் காவல் நிலைய அதிகாரிகளின் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வளவு பெரிய முடிவை அவர் எடுத்ததற்கான காரணம் என்ன என்று அறிய பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்துகொண்டு வருகிறது.


இதற்கிடையில், முதல் கட்ட விசாரணையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தமிழன் பிரச்சாவின் மனைவி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்பாடுகின்றது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. 


தற்கொலை கடிதம் ஏதேனும் சம்பவ இடத்தில் உள்ளதா என்பதை கண்டறியும் பணியிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
இந்த செய்தி குறித்த மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR