சிறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பிலிருந்து லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன் என்று திமுக செய்ய தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.


சசிகவுக்குக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, சத்திய நாராயணராவிடம் அவர் அறிக்கையும் தாக்கல் செய்தார்.


சசிகலாவுக்கு என்று அவருடைய அறையில் நவீன வசதியுடன் கூடிய எல்.இ.டி. தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. கட்டில், மெத்தை, தொலைக்காட்சி பெட்டி, சிறப்பு சமையலறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் தனி சமையல் அறை ஒதுக்கப்பட்டு இருந்ததாக குற்றம்சாட்டியயுள்ளனர்.


இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவு வெளியிட்டார். அதில்,


பெங்களூரு சிறையில் சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்?


 



 


இவ்வாறு பதிவிட்டுள்ளார்.