சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் எஸ்.பாலசந்திரன் பேட்டியளிது பேசியதாவது:-


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஓரளவு மழை பெய்து வருகிறது.  அடுத்த 2 நாட்களுக்கு வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  மழை பெய்யும். மொத்தத்தில் தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும். பெரும்பாலும் மாலை நேரங்களில் தான் இந்த மழை இருக்கும்.சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று அவர் கூறினார்.