சென்னை மெட்ரோ ரயில் சேவையில் தற்போது பயணசீட்டு வாங்க வாங்க ஸ்மார்ட் கார்ட் பயன்பாட்டில் உள்ளது. இந்த ஸ்மார்ட் கார்டை மாநகர போக்குவரத்து பேருந்திலும் பயன்படுத்தி பயணசீட்டு பெறுவது சாத்தியமா என்ற ஆய்வு நடைபெற்று வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில், மாநகர போக்குவரத்து பேருந்து நடத்துனர் கையில் உள்ள பயணசீட்டு இயந்திரத்தில் இந்த ஸ்மார்ட் கார்டை நுழைப்பதற்கான வழி இருப்பதாகவும், ஸ்மார்ட் கார்டை அந்த இயந்திரத்தில் பயன்படுத்தி சோதித்த போது அது முறையாக இயங்குவது தெரியவந்தது. இனி ஸ்மார்ட் கார்ட் மூலமும் பயணசீட்டு பெற முடியும் என்று நிரூபணம் ஆகியுள்ளது.


தற்போது, முதல் கட்ட சோதனை முடிவடைந்துள்ளது. இந்த இரு முறைகளையும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான தீர்மானங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். 


இந்தமுறை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் மக்கள் மிகவும் பயனடைவார்கள் என்றும், அதற்கான வேலைகள் விரைவில் தொடங்கும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.