தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,சுக்கு இன்று முதல், 'ஒய்' ('Y') பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 'ஒய்' ('Y') பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.


அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி கூடுதல் பாதுகாப்பு கேட்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்றுமுதல் 'ஒய்' ('Y') பாதுக்காப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. 


இந்த நிலையில் இன்று முதல் 'ஒய்' ('Y') பிரிவு பாதுகாப்பு படையினர் பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு வழங்க தொடங்கியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு துப்பாக்கி ஏந்திய 8 துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.