காவலரை பெண் குரலில் பேசி ஏமாற்றிய வாலிபர் வெட்டிக்கொலை, இச்சம்பவத்தில் காவலரின் தம்பி கைது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வ.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டையைச் சேர்ந்தவர் தெற்குமலை, அவரது மகன் அய்யனார் (25 வயது). B.Sc பட்டதாரியான இவர், தனியார் கல்லூரி ஒன்றில் B.Ed படித்து வந்தார். அதேப் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் என்றழைக்கப்படும் குமார் (26 வயது) சென்னை எண்ணூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.


காவலர் கண்ணனை கேலி செய்வதற்காக அவரிடம் செல்போனில் அய்யனார் பெண் குரலில் பேசி ஏமாற்றியுள்ளார். அய்யனார் குரலில் மயங்கிய காவலர் கண்ணன், அய்யனாரை பெண் என்றே நினைத்து பேசிப் பழகி வந்துள்ளார். 


இந்நிலையில் கடந்த வாரம் தனது சொந்த ஊருக்கு காவலர் கண்ணன் வந்தபோது, தன்னிடம் பேசியது அய்யனார் தான் என்பது தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த கண்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனினும் அவரை காப்பாற்றும் முயற்சாயக அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர் அவரது உறவினர்கள்.


இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த காவலர் கண்ணனின் தம்பி விஜயகுமார் (21 வயது), அவரது நண்பர்கள் டான்சி மற்றும் தமிழரசன் ஆகியோர் இணைந்து அய்யனாரை வெட்டிக் கொன்றுள்ளனர். 


அய்யனாரின் உடல் அருகாமையில் இருக்கும் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவரின் பெற்றோர்கள் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.


இப்புகாரின் பேரில் விஜயகுமார், டான்சி, தமிழரசன் ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாகி இருக்கும் காவலர் கண்ணன் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிந்து அவரைத் தேடிவருகின்றனர்.