வைரமுத்துவுக்கு எதிரான கண்டன பொதுக் கூட்டத்தில் எங்களுக்கும் சோடா பாட்டில் வீசவும் தெரியும், கற்களை வீசவும் தெரியும் என்ற ஜீயர் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரமுத்துவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜ ஜீயர் பேசுகையில், எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும், கற்களையும் வீச தெரியும். ஆனால் அவற்றை நாங்கள் செய்ய மாட்டோம் என்றார்.


இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சோடா பாட்டில் வீசுவோம் என்று ஜீயர் பேசுவது பொறுப்புள்ள பேச்சு இல்லை. சோடா பாட்டில் வீசுவோம் என்று யார் கூறினாலும் அது கண்டனத்துக்குரியது. ஜீயரின் பேச்சு வன்முறையை தூண்டுவது போன்றே உள்ளது என்றார்மே


மேலும் அவர், கனத்த இதயத்துடன் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டணம் உயர்வு குறித்து, ஸ்டாலின் சொல்வதை மக்கள் நம்ப தயாராக இல்லை. 


பேருந்துகளில் கட்டண உயர்வுக்கு பின்னும் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் தான் இயங்குகிறது எனக் கூறினார்.