புதுடெல்லி: Post Office Scheme: பொதுமக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக நிறைய சிறு சேமிப்பு திட்டங்களை இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகிறது. தபால் நிலையங்களில் சேமிக்கப்படும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு வரி விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் இருக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்புத் திட்டங்கள் (Post Office Saving Scheme) உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் முழு விவரத்தை காண்போம்.


ALSO READ | இந்த ‘1’ ரூபாய் காயின் இருந்தால், ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகலாம்..!!


போஸ்ட் ஆபீஸ் ஆர்டியில் முதலீடு செய்வது எப்படி
போஸ்ட் ஆபீஸ் ஆர்டி டெபாசிட் கணக்கு (RD Account) என்பது சிறிய தவணைகளை சிறந்த வட்டி விகிதத்துடன் டெபாசிட் செய்வதற்கான அரசாங்க உத்தரவாத திட்டமாகும், இதில் நீங்கள் ரூ.100 என்ற சிறிய தொகையில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை, அதில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் போடலாம்.


இந்த திட்டத்திற்கான கணக்கு ஐந்து ஆண்டுகளுக்கு திறக்கப்படுகிறது. இருப்பினும், வங்கிகள் ஆறு மாதங்கள், 1 வருடம், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் என தொடர் வைப்பு கணக்குகளை வழங்கும் வசதியை வழங்குகின்றன. அதில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தின் மீது ஒவ்வொரு காலாண்டிலும் (வருடாந்திர விகிதத்தில்) வட்டி கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் உங்கள் கணக்கில் (கூட்டு வட்டி உட்பட) சேர்க்கப்படும்.


உங்களுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்
தற்போது, ​​தொடர் வைப்புத் திட்டத்தில் 5.8% வட்டி கிடைக்கிறது, இந்த புதிய விகிதம் ஏப்ரல் 1, 2020 முதல் பொருந்தும். இந்திய அரசு அதன் அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை ஒவ்வொரு காலாண்டிலும் நிர்ணயிக்கிறது.


மாதந்தோறும் 10 ஆயிரம் போட்டால் 16 லட்சம் கிடைக்கும்
ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் ரூபாயை தபால் நிலைய RD திட்டத்தில் முதலீடு செய்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு 5.8% வீதத்தில் 16 லட்ச ரூபாய்க்கு மேல் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் முதலீடு                         10,000 ரூபாய்
வட்டி                                                                       5.8%
மெச்சுரிட்டி                                                         10 ஆண்டு


10 ஆண்டுகளுக்குப் பிறகு மெச்சுரிட்டி தொகை = ரூ 16,28,963


RD கணக்கு பற்றிய முக்கியமான விஷயங்கள்
நீங்கள் தொடர்ந்து கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும், நீங்கள் பணத்தை டெபாசிட் செய்யவில்லை என்றால் ஒவ்வொரு மாதமும் ஒரு சதவிகிதம் அபராதம் செலுத்த வேண்டும். 4 தவணைகள் தவறவிட்ட பிறகு உங்கள் கணக்கு தானாகவே மூடப்படும்.


ALSO READ | Old is Gold: இந்த ‘25’ பைசா உங்களிடம் இருந்தால், ₹1.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR