மொபைல் போன் அழைப்புக்கான இணைப்பு கட்டணத்தை 14-க்கு பைசாவிலிருந்து 6 பைசாவாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்- TRAI) குறைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2020-ம் ஆண்டில் இருந்து இந்த கட்டணமும் இருக்காது என்று (டிராய்- TRAI)கூறியுள்ளது. மொபைல் போன் சேவையில் புதிதாக நுழைந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு டிராயின் இந்த நடவடிக்கை அதிக பயனளிக்கும்.


மொபைல் போன் சேவை அளிக்கும் ஒரு நிறுவனம், பிற நிறுவனங்களிடம் இருந்து தனது வாடிக்கையாளருக்கு வரும் அழைப்பை இணைக்க 14 பைசாவை எதிர் நிறுவனத்திடம் இருந்து கட்டணமாக பெற்று வந்தது. தற்போது இந்த கட்டணம் 6 பைசாவாக குறைந்துவிட்டது.