அரசு வைலைக்கு தான் செல்வேன் என காத்திருக்கும் மக்களுக்கு அருமையான வாய்ப்பு, Aadhaar அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Aadhaar நிறுவனத்தில் தட்டச்சு பணியாளர்கள், மூத்த கணக்காளர், செயலாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக UIDAI தெரிவித்துள்ளது. விண்ணபிக்க கடைசி தேதி வரும் ஏப்ரல் 20, 2018 எனவும் குறிப்பிட்டுள்ளது.


இந்த பணி விபரங்களை முழுமையாக தெரிந்துக்கொள்ள UIDAI-ன் அதிகாரபூர்வ இணையதளமான https://uidai.gov.in/ -ல் சென்று அறிந்துக்கொள்ளலாம். தகுதியுடைய வேட்பாளர்கள் மும்பை அலுவலகத்தில் தங்கள் சான்றிதழ்களை சமர்பித்து விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.


தகுதி வரம்பு...


  • மத்திய, மாநில அரசுகள், யூனியன் / பி.எஸ்.யூ., தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் ஏதோனும் ஒன்றில் பணியில் இருப்பவராக இருத்தல் வேண்டும்.


தேர்ந்தெடுப்பதர்கான வரைகூறு...


  • எழுத்து தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்சி பெருபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்


விரும்பத்தக்க அனுபவம்...


  •  நல்ல ஸ்டீனோகிராபி மற்றும் தட்டச்சு திறன் திறமை


பிரதிநிதிகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்...


  •  பிரதிநிதித்துவம் காலம் மூன்று ஆண்டுகளாக இருக்க வேண்டும், ஒருவேலை அது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீட்டிக்கப்படலாம்.


வயது வரம்பு...


  • அதிகபட்ச வயது வரம்பு 56 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்


தகுதி...


  • வேட்பாளர்கள் பேட் மேட்ரிக்ஸ் லெவல் - 6 பணியில் இருத்தல் வேண்டும் அல்லது பேட் மேட்ரிக்ஸ் லெவலில் நான்கு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.