பேஸ்புக் (Facebook) நிறுவனம் தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த புதிய அம்சங்களைக் கொண்டு வருகிறது. நிறுவனம் தனது செயலியில்  பல புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. இதை பயனர்கள் இப்போது எளிதாகப் பயன்படுத்தலாம். அதிக பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியான வாட்ஸ் அப்பில்,  செய்தி நீக்கும் அம்சத்தை  (Vanish Mode) அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் தளமான பேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger) மற்றும் புகைப்பட பகிர்வு பயன்பாடான இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகியவற்றில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொழில்நுட்ப தளமான தி வெர்ஜ் வெளியிட்ட செய்திபடி, நீங்கள் இப்போது பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள எந்தவொரு நண்பருக்கும் உரை, புகைப்படங்கள், குரல் செய்திகள், ஈமோஜி அல்லது ஸ்டிக்கர்களை அனுப்பலாம். அவை ரிசீவர் பார்த்த பிறகு தானாகவே மறைந்துவிடும். இந்த அம்சத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், நீங்கள் இதை ஒரு தனி அரட்டையாகப் பயன்படுத்த முடியும், மேலும் அரட்டை செய்திகள் படித்த பிறகு மறைந்துவிடும் (Disappear). இந்த புதிய அம்சங்கள் தற்போது அமெரிக்காவில் தொடங்கியுள்ளன. மிக விரைவில் இது உலகின் பிற நாடுகளில் புதுப்பிக்கப்படும்.


ALSO READ |  WhatsApp-ல் வந்துள்ள அசத்தல் அம்சங்களை பயன்படுத்துவது எப்படி?


சில நாட்களுக்கு முன்பு, பேஸ்புக் தனது புதிய அரட்டை பயன்பாட்டை வாட்ஸ்அப்பில் (WhatsAPP) அறிமுகப்படுத்தியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அம்சத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், உங்கள் செய்தி பெறுநர் அதை வாட்ஸ்அபியில் பார்த்தவுடன், அது தானாகவே மறைந்துவிடும். இந்த வாரம் முதல், இந்த புதுப்பிப்பு இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது. 


மேலும் வரும் காலத்தில் இதுபோன்ற பல மாற்றங்கள் வரும் என்று கூறப்படுவதால் பேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) பயனாளிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR