வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய வானூர்தி கலிபோர்னியாவில் முதல் தடவையாக சோதிக்கப்பட்டது. இந்த விமானத்தில் ஆறு போயிங் 747 என்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த பெரிய விமானம் நேற்று (சனிக்கிழமை) மோஜவே பாலைவருக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது விண்வெளியில் ராக்கெட்டுகளை வைத்திருப்பதற்கும், தேவைப்படும் போது விண்கலங்களை ஏவுவதற்கும் இந்த விமானம் பயன்படும். உண்மையில், 


தற்போது நிலப்பரப்பிலிருந்து ராக்கெட்களை ஏவப்படுகிறது. இந்த சோதனை வெற்றி பெற்றால், விண்ணிலிருந்து ராக்கெட்களை ஏவப்படும். இதனால் செலவும் மிச்சம் ஆகும். 


அதன் சிறப்புக்கள் என்ன:-


> இந்த விமானம் மூலம் செயற்கைக்கோள்கள் ஏவுகணை ராக்கெட்டுகளின் உதவியுடன் விண்ணில் இருந்து ஏவப்படும்.


> விண்வெளியில் ராக்கெட்டுகளை வைத்திருப்பதற்க்கு இது சிறந்ததாக இருக்கும்.


> இது Scalped Composites என்ற பொறியியல் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.


> இருவேறு விமானங்களை ஒருங்கே கொண்டது போன்று ஆறு இன்ஜின்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


> இதன் இறக்கைகள் ஒரு கால்பந்து மைதானத்தை விட அதிகம். இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடிகளாகும்


> இந்த விமானம் முதல் பயணத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் பறந்து