உலகின் மிகப் பழமையான கப்பல் சிதைவு, அட்லாண்டிக் பெருங்கடலின் கருங்கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிழக்கு ஐரோப்பா, காகசஸ் மற்றும் மேற்கு ஆசியாவிற்கும் இடையே அட்லாண்டிக் பெருங்கடலின் நீர் மற்றும் குறுகலான கடல் பகுதியில் இருக்கும் பகுதி கருங்கடல்(Black Sea) ஆகும். இந்த கருங்கடலில் சுமார் 2கிமி ஆழத்திதில் உலகின் மிகப் பழமையான கப்பல் சிதைவு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.


இந்த கப்பல் சிதைவானது கிரேக்க வாணிகக் கப்பல் எனவும், 75-அடி நீளமுள்ள இந்த கப்பல் சுமார் 2,400 ஆண்டுகள் பழமையானது எனவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்தக் கப்பலின் பாகங்கள் அதிகம் சிதைந்து போகாமல், அதன் உண்மையான வடிவிலேயே இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எண்ணெய், எரிவாயு இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்காகக் கடற்படுகையை ஆராயும் சிறப்புக் கேமராவைப் பயன்படுத்தி, உடைந்த 60 கப்பல்களைத் தேடும் பணி கருங்கடலில் நடைப்பெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்தக் கப்பலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கப்பலின் ஒரு பகுதியைக் கரிமக் காலச் சோதனைக்கு உட்படுத்தியதில், அது உலகின் மிகப் பழைய கப்பல் என்பது தெரியவந்துள்ளது.


பக்கவாட்டில் சரிந்தவாறு உள்ள இந்த கப்பலின் பாய்மரமும்(Mast) சுக்கானும்கூட(Rudder) தற்போது பாழடையாமல் அப்படியே இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலின் 2கிமி ஆழத்தில், கடலில் ஆக்ஸிஜன் இருக்காது என்பதால், மரத்தால் ஆன கப்பல் மட்கிப் போகவில்லை எனவும் ஆய்வாளர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பழங்காலத்தில் கப்பல் கட்டுமானம் எப்படி இருந்தது, கப்பல் பயணம் எப்படி இருந்தது என்பன போன்ற விபரங்களைப் புரிந்துகொள்ள, இந்தக் கண்டுபிடிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்