பீகாரின் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாபின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்தித் தலைவர் லாலு பிரசாத் யாதவ். அவரின் மூத்த மகனான தேஜ் பிரதாபின் திருமண விழாவில் பங்கேற்க கடந்த வியாழன் அன்று பரோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்த விழாவில் முதலமைச்சர் நிதீஷ்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


இந்த திருமணத்தின் சிறப்பாக, மணமகன் தேஜ் பிரதாப் சிங்கை சிவனாகவும், மணமகள் ஐஸ்வர்யா ராயை பார்வதியாகவும் உருவகப்படுத்தி போஸ்டர் அடிக்கப்பட்டது. இந்த போஸ்டர் குறித்து சமூக வலைத்தளங்களில் மக்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.