தெலுங்கு செய்தி தொலைக்காட்சி தொகுப்பாளர் ராதிகா ரெட்டி 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டு உள்ளார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கு செய்தி தொலைக்காட்சி தொகுப்பாளர் ராதிகா ரெட்டி. இவர் நேற்று இரவு 10.50 மணிக்கு, அவரது வீட்டு மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.


தற்போது இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராதிகா ரெட்டியின் வீடு மூசாபேட்டில் இருக்கிறது. இவர் பெற்றோருடன் வாழ்ந்துவந்தார். நேற்றிரவு 10.50 மணியளவில் அவர் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சமீபகாலமாக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.


மேலும் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தற்கொலைக் கடிதத்தில், தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என அவர் எழுத்தி உள்ளார் என போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.