பாட்னா: சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாட்னாவின் மித்தாப்பூர் சபாஜி பகுதி காவல்நிலையத்திற்கு அருகியில் உள்ள சாலையில் நேற்று இரவு சிறுமி ஒருவர் தனியாக ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இருவர் கடத்த முயல்கையில், சிறுமி எழுப்பிய ஒலி கேட்டு காவலர்கள் விரைந்து கடத்தல்காரர்களை சிறைபிடித்தனர்.


சிறுமி மீட்கப்பட்ட போது அவர் அரை நிர்வாண நிலையில் இருந்ததாகவும், உடனடி மருத்துவ தேவைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சோட்டு, பேக்கன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விசாரணையில் இவர்களது நண்பர்களுடன் கூட்டு புனர்வு வைத்துக்கொள்ள இச்சிறுமியை கடத்த முயன்றதாக தெரியவந்துள்ளது.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி குறித்து அவரது தந்தைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சிறுமியின் தந்தை பாட்னாவில் இருக்கும் தனது உறவினர்களை தொடர்புகொண்டு சிறுமியை பார்த்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.


இச்சம்வம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!