சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி நீக்கம் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் கொடுத்த தீர்மானத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று முன்தினம் நிராகரித்தார். ‘தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கக் கூடியதாகவோ அல்லது ஏற்கக் கூடியதாகவோ இல்லை’  என்று தனது உத்தரவில் அவர் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, வெங்கையாவின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது பற்றி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்து வருகின்றனர். 


இந்நிலையில், இது குறித்து வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது...!


தலைமை நீதிபதி மீது, கண்டன தீர்மானம் தாக்கல் செய்வதற்கான காரணங்கள் பற்றி சட்ட வல்லுனர்கள் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகே, எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. 


எதிர்க்கட்சிகள் கொடுக்கும் மனுவை ஆராயாமல், சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு, ராஜ்யசபா தலைவர் அலுவலகம் ஒன்றும் தபால் நிலையம் அல்ல என்றார்.


மேலும், நான் எப்போதும் சட்ட விதிமுறையை ஆராய்ந்து பின்னர் தான் முடிவு எடுப்பேன் என்று கூறினார்.