கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டில் இன்று நடைப்பெற்ற பளுதுாக்குதல் போட்டியில், இந்திய வீரர் வெங்கட் ராகுல் ராகலா தங்கப் பதக்கம் வென்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைப்பெற்று வரும் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில்,. இன்று நடைப்பெற்ற பலுதூக்குதல் போட்டியின் ஆடவர் 85 கிலோ பிரிவில் இந்தியாவிற்கான 4-வது தங்கப் பதக்கத்தினை வெங்கட் ராகுல் ராகலா பெற்றுள்ளார்.


முன்னதாக...


  • கடந்த ஏப்ரல் 5-ஆம் நாள், மகளிருக்கான பளுதூக்குதல் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்க பதக்கம் வென்றார்.

  • கடந்த ஏப்ரல் 6-ஆம் நாள், மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்க பதக்கம் வென்றார்.

  • இன்று ஏப்ரல் 7, காலை ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ் தங்க பதக்கம் வென்றார்.

  • இந்நிலையில் தற்போது ஆடவருக்கான பளுதூக்குதல் 85 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வெங்கட் ராகுல் ராகலா தங்க பதக்கம் வென்றுள்ளார்.


இதன்மூலம் இந்தியா 4 தங்கம் வென்று பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது!