கோவையில் பாஜக மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமாரின் கார் இன்று அதிகாலையில் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவையில் பாஜக பிரமுகரின் காரை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா காரில் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர். இதுதொடர்பாக சி.ஆர்.நந்தகுமார் அளித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


சி.ஆர்.நந்தகுமாரின் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி-வை கைப்பற்றி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


 



 



 


 


இதற்கிடையில், கோவை செல்வபுரம் பகுதியில் உமாபதி என்பவரின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கும் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். 


முன்னதாக கடந்த 7-ம் தேதி கோவை சித்தாபுத்தூரில் அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.