சென்னை திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை திறந்து வைத்து, பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே சென்னை வந்துள்ள மோடியை மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.


அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ராணுவ கண்காட்சி நடக்கும் திருவிடந்தை பகுதிக்கு சென்றார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா, தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


திருவடந்தையில் ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் ராணுவ கண்காட்சி தொடங்கியது. தற்போது பிரதமர் மோடி ராணுவ கண்காட்சி விழாவில் உரையாற்றி வருகிறார்.