விஜய் படத்துக்கு சிறப்பு அனுமதி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே படப்பிடிப்பை நடத்தும் விஜய்சேதுபதி நடிக்கும் ஜுங்கா படக்குழுவினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து, ஸ்டிரைக் அறிவித்துள்ளது. இதனால் பல படங்களின் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிற்கிறது, இதனால் கடந்த மார்ச் 1-ம் தேதி புதுப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. 


எனவே, மார்ச் 16 முதல் சென்னையில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அஜித்தின் விசுவாசம் படத்திற்காக செட் போட்டப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்கவில்லை. வருகிற 23-ம் தேதி முதல் வெளியூர்களில் நடக்கும் படப்பிடிப்பும் நிறுத்தப்பட இருக்கிறது


இதை தொடர்ந்து, விஜய், முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு, சென்னை விக்டோரியா ஹாலில் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில், விஜய்சேதுபதி நடிக்கும் ஜுங்கா படக்குழுவினர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி, சாயிஷா, இயக்குநர் கோகுல், ஒளிப்பதிவாளர் உட்பட பலர் சென்றுள்ளனர். 


தயாரிப்பாளர் சங்கம் தடையை மீறி விஜய் சேதுபதி இப்படி செய்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


விஜய் படத்துக்கு சிறப்பு அனுமதி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே ஜுங்கா படப்பிடிப்பை நடத்தும் முடிவுக்கு விஜய்சேதுபதி வந்ததாக படக்குழுவினர் கூறியுள்ளார்.