காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசினை கண்டித்து வரும் 5-ஆம் தேதி திமுக தரப்பில் முழு வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் இன்று புதுவை முதல்வர், திமுக செயல்தலைவரை சந்தித்துள்ளார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலம் முழுவதும் காவிரி விவகாரம் குறித்து போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் இன்று திமுக செயல் தலைவர் முக ஸ்டாலினை சென்னையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் காவிரி விவகாரம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.


முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவிக்கையில், காவிரி விவகாரம் தொடர்பாக திமுக முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு தங்களது ஆதரவினை அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.


மேலும், காவிரி விவகாரத்தில் தமிழக அரசும் புதுவையை வஞ்சித்து வருகிறது. கர்நாடகத்தில் இருந்து தமிழகம் தண்ணீர் பெற்றபோதிலும் காரைக்கால் விவசாயிகளுக்கான தண்ணீரை தமிழகம் தருவதில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.