தூத்துக்குடி சம்பவம் குறித்த முழுமையான அறிக்கை கிடைக்காததால் பிரதமர் வருத்தம் தெரிவிக்கவில்லை -சுப்பிரமணியன் சுவாமி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். 


இதை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே பேசிய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் பாமர மக்களா, பயங்கரவாதிகளா என்ற விவரம் தெரிய வேண்டும். 


இந்த சம்பவம் பற்றி முழுமையான அறிக்கை கிடைக்காத நிலையில் பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். நடிகரான ரஜினிகாந்த் இன்றைக்கு இருப்பார், நாளைக்கு இருப்பாரா என்பது அவருக்கே தெரியாது. வீரன் போல் வசனம் பேசிய சீமான் காணாமல் போய் விட்டார். மத்திய அரசுக்கு எதிராக தனிப்பட்ட கட்சிகள் செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.