இலங்கையில் குடிவரவு சட்டத்தை மீறி குடியிருந்த 108 இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்று, அந்நாட்டு விதிமுறைகளை மீறி தங்கியதாக 108 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 42 பேர் விசா முடிவடைந்த நிலையில், இலங்கையில் தங்கி தொழில்புரிந்து வந்துள்ளனர்.