சோமாலியாவில் உள்ள மொகதீசுவில் என்ற இடத்தில், தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 15 பேர் காயம்மடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொகதீசுவில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் போலீசார் அணிவகுப்பு நடத்திக்கொண்டிருக்கும் போது தீடிரென போலீஸ் சீருடை அணிந்த மர்மநபர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளதாக  மேஜர் மகம்மது ஹுசைன் தெரிவித்துள்ளார்.


மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய குழு அல்-ஷபாப் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகவும், அல்-ஷபாப் மொகடிஷுவிலும் மற்ற நகரங்களிலும் அடிக்கடி குண்டுவீச்சுக்களை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.