இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து பண்டாரவளை பகுதியில் இன்று அதிகாலை பேரூந்து வெடித்து 19 பேர் காயமடைந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு பயணியின் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு வெடித்ததே இதற்கு காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக இலங்கை சட்டம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், பேருந்து வெடிப்புச் சம்பவத்தை அடுத்து ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழி நடத்துகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.


ஆனால் பேருந்து வெடிப்புச் சம்பவத்தை பயங்கரவாத தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளது இலங்கை ராணுவம்.