அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் ஹவாய் தீவில் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ளது. அங்கு தெற்கு நுழைவுவாயில் வழியே மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அவர் அங்கு திடீரென துப்பாக்கியால் சுடத்துவங்கினார்.


இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். எனினும், காயமடைந்தோரின் எண்ணிக்கை உயர கூடும் என ஹவாய் நியூஸ் நவ் தெரிவித்து உள்ளது.