தேசிய கீதத்தை அவமதித்தால் 3 வருடம் சிறை தண்டனை வழங்கும் சட்ட மசோதாவை சீனா அரசாங்கம்  நிறைவேற்ற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே சீனாவில் தேசிய கீதத்தை அவமதித்தால் 15 நாட்கள் சிறையில் தண்டனை வழங்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சீனா அரசு இது சம்பந்தமான வரைவு மசோத ஒன்றை, அந்நாட்டு பார்லிமென்ட்டில் தாக்கல் செய்துள்ளது. 


தேசிய கீதத்தை அவமதிக்கும் நபர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.