காபூலின் புறநகர் பகுதியில் போலீஸ் படையினரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பேருந்தில் இருந்த 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தாக்குதல் பற்றி முழுமையான தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், தலீபான் பயங்கரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 


ஆப்கானிஸ்தானின் உள்துறை மந்திரி சேதிக் சிதிக்கி தனது டுவிட்டர் பக்கத்தில்:- இந்த தாக்குதல் பற்றிய விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.


ஆப்கானிஸ்தானில் இருந்து பன்னாட்டு படைகள் விலக்கி கொள்ளப்பட்ட பிறகு இது போன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.