வெலிங்டன்:  நியூசிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் ISIS பயங்கரவாதி ஒருவன் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் ISIS பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் நேற்று திடீரென நுழைந்தார். அவர் அங்கிருந்த சிலரை கத்தியை வைத்து சரமாரியாக தாக்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை சுட்டு வீழ்த்தினர். விசாரணையில், அவர் காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்து வந்தவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.  இதுதொடர்பாக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கூறுகையில், கடந்த 2011-ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த அந்த நபர் நியூசிலாந்து வந்துள்ளான்.




பின்னர் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் அவர் இருந்துள்ளார். ஆக்லாந்து நகர்ப்புற பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்ற அவர் அங்கிருந்து கத்தியை எடுத்து மக்களை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.  இதில், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவரை கண்காணித்து வந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். காயம் அடைந்தவர்களில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. IS பயங்கரவாத இயக்கத்தால் கவரப்பட்ட  அந்த நபர் இந்த வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளதாக மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


ALSO READ தாலிபானுக்கு கூகிள் கொடுத்த அடி: இவற்றை எல்லாம் பிளாக் செய்தது கூகிள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR