Mexico Viral Video: மெக்சிகோவில் வீட்டில் நடந்த பார்ட்டி ஒன்றில் மலர்தூவுவதற்காக ஏற்பாட செய்யப்பட்டிருந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். தம்பதிகள் ஒன்று தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் அறிவிக்கும் பார்ட்டி நிகழ்ச்சியின் போது அதன் விருந்தினர்கள் முன் விமானம் விபத்துக்குள்ளானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமானம் விபத்துக்குள்ளானது அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ ட்விட்டரில் (X) தற்போது  'ஓ பேபி' என்று எழுதப்பட்ட ஒரு பெரிய பலகையின் முன் நின்று கொண்டிருந்த தம்பதிகளுக்கு மேல் விமானம் பறந்தது. ஆனால் இந்த நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து இறுதியில் திறந்தவெளியில் விழுந்து நொறுங்கியது. விமானம் விபத்துக்குள்ளாகும் போது மக்களின் அலறல் சத்தம் கேட்பது வீடியோவில் தெரிகிறது. இருப்பினும், தம்பதிகள் உட்பட சிலர் இதை அறியாமல் தொடர்ந்து கொண்டாடத்தில் ஈடுபட்டதையும் வீடியோவில் காண முடியும். 


மேலும் படிக்க | G-20 உச்சி மாநாட்டைத் தவிர்க்கும் சீனா... ஏமாற்றம் அடைந்த ஜோ பைடன்!


மெக்சிகோவின் சினலோவா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. விமான விபத்தில் இறந்த விமானியின் பெயர் 32 வயதான லூயிஸ் ஏஞ்சல் என தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் இடது இறக்கை, விமானத்தில் இருந்து பிரிந்து செல்வது வீடியோவில் காணப்படுகிறது. விமானி விபத்தில் சிக்கி காயமடைந்ததை விருந்தினர் ஒருவர் பார்த்துள்ளார். இதையடுத்து, அவர் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்த நிலையில், அதிகாரிகள் விமானியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த Piper PA-25-235 Pawnee விமானம், வானத்தை பிங்க் நிற புகையால் நிரப்பியது, இது தம்பதியருக்கு பெண் குழந்தை பிறப்பதைக் குறிக்கிறது. இருப்பினும், விமானத்தின் இடது இறக்கை நடுவானில் செயலிழந்தது, இதனால் விமானம் விபத்துக்குள்ளாகும் முன் கட்டுப்பாடில்லாமல் சுழன்று விபத்துக்குள்ளானது. அந்த பிங்க் நிற தூள்களை திறக்கும்போது தான் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. 


ட்விட்டர் பயனர்கள் அந்த பார்ட்டியை நடத்திய ஜோடி மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். மற்றவர்கள் அதாவது பார்ட்டிக்கு வந்திருந்த விருந்தினர்கள் அங்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கவில்லை என்று நம்ப முடியவில்லை எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு பயனர்,'இந்த பாலினத்தை வெளிப்படுத்தும் பார்ட்டிகளால் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் இறக்கின்றனர், இது எப்போதும் அவர்களின் கையை விட்டு வெளியேறுகின்றன' என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்த 5 வயது சிறுவன்! என்ன நடந்தது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ