மனைவியின் மூளையை தின்று... மண்டை ஓட்டை ஆஷ்ட்ரேயாக பயன்படுத்திய மனித மிருகம்!

மனித மிருகம் ஒருவன் தன் மனைவியை கொன்றதோடு நிற்காமல் அவளின் மூளையை வெளியே எடுத்துச் சாப்பிட்ட பின், அவளது மண்டை ஓட்டின் ஒரு பகுதியை சிகரெட் சாம்பலை தூவுவதற்கான ஆஷ்ட்ரேயாக பயன்படுத்தியுள்ளான்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 8, 2023, 11:56 AM IST
  • மண்டை ஓட்டை ஆஷ் ட்ரே ஆக்கி அதில் சிகரெட் சாம்பலை நிரப்ப ஆரம்பித்தான்.
  • மனம் திருப்தியடையாத அரக்கன்.
  • மெக்சிகோவில் நடந்த கொடூரமான குற்றச் சம்பவம்.
மனைவியின் மூளையை தின்று... மண்டை ஓட்டை ஆஷ்ட்ரேயாக பயன்படுத்திய மனித மிருகம்! title=

மெக்சிகோவில் நடந்த கொடூரமான குற்றச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்கு மனைவியைக் கொன்று அவரது சடலத்தை வைத்து கொடூரமான செயல்களில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பிசாசு வழிபாடு செய்பவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது மனைவியின் மூளையை சமைத்து சாப்பிட்டுள்ளார். அவர் மூளையை டகோஸ் (Tacos) எனப்படும் உணவை வைத்து அடைத்து சாப்பிட்டார். டகோஸ் என்பது ஒரு பிரபலமான உணவாகும். இது ரொட்டியைப் போன்றது மற்றும் அதன் மேலே வெவ்வேறு வகை காய்கறிகளை அல்லது இறைச்சிக்களை நிரப்பி வைத்து தயாரித்து உண்ணப்படும் ஒரு உணவாகும்.

மனம் திருப்தியடையாத அரக்கன்

மூளையை தின்ற பிறகும் அரக்கனின் மனம் திருப்தியடையாதபோது, ​​தன் மனைவியின் மண்டை ஓட்டை ஆஷ் ட்ரே ஆக்கி அதில் சிகரெட் சாம்பலை நிரப்ப ஆரம்பித்தான். குற்றம் சாட்டப்பட்டவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர். இதற்கு முன்பும் மனைவியை அடித்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் அல்வாரோ (32), அவர் ஜூலை 2 ஆம் தேதி பியூப்லாவில் உள்ள தம்பதியரின் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். ஆல்வாரோ பில்டராக பணிபுரிந்தார். அவரது மனைவியின் தாயார் மரியா அலிசியா, ஜூன் 29 அன்று அல்வாரோவை கொலை செய்ததாக குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க | தினமும் மனைவிக்கு மயக்க மாத்திரை... 51 ஆண்களை அத்துமீற வைத்த கணவர் - அதிர்ச்சி சம்பவம்

'கொலையைக் கேட்டது பிசாசு'

அதிகாரிகளின் கூற்றுப்படி, அல்வாரோ கொடூரமான குற்றத்தைச் செய்த போது போதைப்பொருள் வைத்திருந்தார். விசாரணையில்,  பிசாசின் கட்டளையால் அவ்வாறு செய்ததாக அல்வாரோ கூறினார். கொலைக்குப் பிறகு, அல்வாரோ தனது மனைவியின் உடலைத் துண்டு துண்டாக்கி பிளாஸ்டிக் பைகளில் அடைத்ததாகக் கூறப்படுகிறது. சில பைகளை வீட்டின் பின்புறமுள்ள குழியில் புதைத்து விட்டு, சிலவற்றை வீட்டுக்குள் வைத்திருந்தார் என விசாரணை செய்த அதிகாரிகள் கூறினர்..

கொலைக்குப் பிறகு போனில் அழைக்கப்பட்ட மகள்

பலியானவரின் பெயர் மரியா மான்செராட். அவருக்கு 12 முதல் 23 வயதில் ஐந்து மகள்கள் இருந்தனர். கொலைக்குப் பிறகு, அல்வாரோ தனது மகள்களில் ஒருவரை அழைத்து தனது தாயைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். அல்வாரோ மற்றும் அவரது மனைவி இருவரும் பிசாசை வணங்கியதாக அவரது உறவினர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பான பதிவுகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்த வழக்கில் மேலும் மேலும் ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | Manslaughter: மகளை முதலைக்கு உணவாக்கிய அப்பா! ஜாதிவெறியில் ஆணவக்கொலை செய்த தந்தை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News