கிர்கிஸ்தானில் உள்ள சீன தூதரகம் முன்பு குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் பலர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை கிடைத்த தகவல் படி ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிகிறது. 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஸ்கேக் பகுதியில் சீன தூதரகம் உள்ளது. தூதரகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து குண்டு வெடித்ததாக கூறப்படுகின்றனர். பலியானவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் இதுவரை  வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் பாதுகாப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து உள்ளனர்.


இந்த கார் சீன தூதரகம் மீது மோதும்படியா வந்ததும், ஆனால் வாயிற்கதவு மூடப்பட்டிருந்ததால் கார் குண்டு வெளியே வெடித்ததாகவும் இதனால் தூதரக அதிகாரிகள் யாருக்கும் பாதிப்பில்லை என்றும் இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.