சோமாலியாவில், தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதலில், 34 பேர் உயிரிழந்தனர் மேலும் சுமார் 52-க்கு மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்நாட்டின் தலைநகர் மொக்திசூவில் உள்ள கடைத்தெரு ஒன்றில்தான் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தீவிரவாதி ஒருவன், காரில் நிரப்பியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துவிட்டு, தப்பி ஓடியுள்ளான்.


இதனால், அங்கிருந்த பொதுமக்களில், 34 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 52க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக, இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும், அல் ஷெபாப் தீவிரவாத இயக்கத்தினர் இதனை நிகழ்த்தியிருக்கலாம் எனவும், ஏற்கனவே இத்தகைய தாக்குதல்களை அவர்கள் நிகழ்த்தியுள்ளதாகவும் சோமாலியா அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.