இந்தோனேசியாவில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தோனேசியாவின் தெற்கு பகுதியில் உள்ள சும்பவா தீவில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணியளவில், அந்தநாட்டின் சும்பா பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 -ஆக பதிவானது.


இந்த நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிவானது பல்வேறுபகுதிகளில் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.  



நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை வரை எந்த தகவலும் இல்லை.


சீபத்தில், அங்கு அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது!