ப்ளோரிடா: பேய் படங்களை பார்த்த ஆவர்வத்தில், தனது வகுப்பு தோழனை கொலை செய்ய முயன்ற இரண்டு பள்ளி சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய நாடுகளின் ப்ளோரிடா மாகானத்திற்கு உட்பட்ட பர்ட்டவ் பகுதியில் உள்ள பிரபல பள்ளியில், மாணவிகள் இருவர் தங்கள் வகுப்பு தோழனை கொலை செய்ய முயற்சித்து கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளனர். பிடிப்பட்ட சிறுமிகள் வயது முறையே 11 மற்றும் 12 என கண்டறியப்பட்டுள்ளது.


குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறுமிகள் பேய் படங்களை பார்த்து, சாத்தான் உலகம் என ஒன்று இருப்பதாக தங்களுக்கு கர்பனை வளர்த்து வந்துள்ளனர். சாத்தானின் மீது கொண்ட ஈர்ப்பால், விரைவில் இறந்து சாத்தான் உலகிற்கு செல்லவேண்டும் என திட்டமிட்டுள்ளனர். சாத்தான் உலகிற்கு சென்றால் அங்கு தனிமைபடுத்தப்பட்டு விடுவோம் என்பதால், தங்களது வகுப்பு தோழர்கள் ஒவ்வொருவராக கொன்று அவர்களை சாத்தான் உலகிற்கு அனுப்பி வைத்துவிட்டு பின்னர் தாங்களும் தற்கொலை செய்துக்கொள்வது என திட்டமிட்டுள்ளனர்.


இந்த திட்டத்தின் முதல் முயற்சியாக முதல் நண்பனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். குறிவைத்த சிறுவனை கோலை செய்வதற்காக கழிவறையில் காத்துள்ளனர், எதிர்பாரா விதாமாக வகுப்பில் பங்கேற்காத இவர்களை தேடி வகுப்பு ஆசிரியர் பள்ளி முழுவதும் தேடி அலைய, கழிவறையில் கத்தியுடன் காந்திருந்த சிறுமிகள் பிடிப்பட்டுள்ளனர்.


பின்னர் இந்த தகவல்கள் பர்ட்டவ் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,. இதனையடுத்து காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட சிறுமிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுமிகளின் மீது முதல் தர கொலை முயற்சி மற்றும் பள்ளி வளாகத்தில் ஆயுதம் ஏந்தி வந்தது என இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற்ற விசாரணைக்கு பின்னர் சிறார் தடுப்பு அமைப்பிற்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.


விசாரணையின் போது சிறுமிகள்... குறிவைத்த சிறுவனை கொன்று அவனது ரத்தத்தினை குடிக்க திட்டமிட்டதாகவும், இந்த சிறுவனை தவிர்த்து 15-25 மாணவர்களையும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்த்தாகவும் தெரிவித்துள்ளனர். இறுதியாக தங்களையும் மாய்த்துக்கொள்ள நினைத்த இச்சிறுமிகள் பேய்களின் மீது கொண்ட ஈர்ப்பால் இந்த செயல்களில் ஈடுப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.