புதுடெல்லி: ₹13,500 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில், தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, இந்தியாவிலிருந்து தப்பியோடி, ஆன்டிகுவா தீவில் வாழ்ந்து வருகிறார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், கடந்த மே 23 மாலை ஆன்டிகுவாவில் உள்ள வீட்டிலிருந்து திடீரென மர்மமான முறையில் காணாமல் போனார். பின்னர் மே 26 அன்று டொமினிகாவில் சிக்கினார். 


டொமினிகா உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, தான் “சட்டத்தை மதிக்கும் குடிமகன்” என்று கூறினார். சோக்ஸி (Mehul Choksi) தனது வாக்குமூலத்தில், அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகத் தான் இந்தியாவிலிருந்து சென்றதாக கூறினார்.


மேலும், தான் டொமினிகாவிற்கு கடத்தப்பட்டதாக கூறிய மெகுல் சோக்ஸி ஆன்டிகுவா போலீசாரிடம் தன்னை கடத்தியதாக சில நபர்களின் பெயர்களையும் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். டொமினிகா உயர்நீதிமன்றத்தில், இந்திய அதிகாரிகள் அவருக்கு எதிராக நடந்து வரும் விசாரணையில், அவர்களையும் விசாரணை செய்யலாம் என்று கூறினார்.


ALSO READ | PNB வங்கி மோசடி: ஆன்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்ஸியை காணவில்லை

“நான் இந்தியாவில் இருந்து தப்பியோட வில்லை. அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு தான், நான் இந்தியாவை விட்டு சென்றேன். நான் இந்தியாவை விட்டு சென்ற போது, அமலாக்க துறை எனக்கு எதிராக கைது வாரண்ட் எதையும் பிறப்பிக்கவில்லை, ”என்று அந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.


பிரதம மந்திரி காஸ்டன் பிரவுன், சோக்சியின் வழக்கறிஞர்கள் போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியதாகக் கூறினார்.


ஆன்டிகுவா காவல்துறையும் அரசாங்கமும், சோக்ஸிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொள்கின்றன என்றுஅந்நாட்டின் பிரதமர் பிரவுன் கூறியுள்ளார்


2018 ஜனவரியில் , தப்பியோடிய தொழிலதிபரான மெலுல் சோக்ஸிக்கு  (Mehul Choksi) ஆன்டிகுவா மற்றும் பார்புடா  குடியுரிமை வழங்கப்பட்டது.  இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில், விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதைத் தடுக்க சட்டப் போரில் ஈடுபட்டுள்ளார்.


ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுன் சோக்ஸியின் குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் டொமினகாவிலிருந்து சோக்ஸியை நேரிடையாக இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | மெகுல் சோக்ஸி சிறையில் இருக்கும் படங்கள் வெளியானது; அவரது ‘காயங்கள்’ கூறுவது என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR