ஜெர்மனியில் உள்ள முனிச் நகரத்தில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி உட்பட பலர் படு காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இது தீவிரவாதத் தாக்குதல் அல்ல எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து முனீச் நகர போலீசார் டிவீட் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டதாவது, முனிச் நகரில் உள்ள சுரங்கப் பாதையில் இன்று காலை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி மோசமாக காயமடைந்துள்ளார். மேலும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.


இது தொடர்பாக முனிச் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.