வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூயார்க் தெற்கு மாவட்டத்தில் அரசு வழக்கறிஞராக இருப்பவர் ப்ரீத் பகராரா. இவர் ஒபாமா ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்டவர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஒபாமா ஆட்சிகாலத்தில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மற்றும் அதிகாரிகளை பதவி விலக டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதில் பகராராவும் ஒருவர். ஆனால், உடனடியாக பதவி விலக மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து, அவரை பதவி நீக்கம் செய்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இது தொடர்பாக பகராரா கூறுகையில்:-


நான் எனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. சில மணி நேரங்களுக்கு முன்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். அமெரிக்க வழக்கறிஞராக பணியாற்றியது எனக்கு கிடைத்த பெருமை. இவ்வாறு அவர் கூறினார்.