பாக்லான்: ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லான் மாகாணத்தில் இன்று (திங்கள்கிழமை) சாலையோர சுரங்க குண்டுவெடிப்பில் நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டோலோ நியூஸ் மேற்கோளிட்டுள்ளபடி, "நான்கு குழந்தைகள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டனர். மேலும் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் ஆறு பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது. 


குண்டுவெடிப்பு நடந்த உடனேயே, பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்த உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.


பாக்லான் மாகாணத்தின் தலைநகரான டான்ட்-இ-ஷாஹாபுதீனில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என மாகாண தலைமையகத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.