சியோல், தென் கொரியா: வடகொரியாவின் கிம் ஜாங் உன் ராணுவ செயற்கைக்கோள் வசதியை ஆய்வு செய்தார். வடகொரியா, தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை உருவாக்கி முடித்துள்ளதாகவும், செயற்கைக்கோளை ஏவுவதற்கான இறுதி ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாயன்று கிம் ஜாங் உன் இராணுவ செயற்கைக்கோள் வசதியை ஆய்வு செய்தார் என வட கொரியா அரச ஊடகமான KCNA செய்தி வெளியிட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.



அறிக்கையின்படி, செயல் திட்டத்தில் நிரந்தரமற்ற செயற்கைக்கோள் ஏவுதல் ஆயத்தக் குழுவின் அடுத்த கட்டங்களையும் கிம் அங்கீகரித்துள்ளார்.


பியோங்யாங் தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை உருவாக்கி முடித்துள்ளதாகவும், செயற்கைக்கோளை ஏவுவதற்கான இறுதி ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசு ஊடகம் தெரிவித்தது.


மேலும் படிக்க | காசி ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு தேவை! மனுவை விசாரிக்கும் நீதிமன்றம்


‘மரியாதைக்குரிய தந்தை’ 


கிம் ஜாங் உன் இனி ‘மரியாதைக்குரிய தந்தை’ என்று வடகொரிய இளைஞர்களால் அழைக்கப்படுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. 38 வயதான கிம் ஜாங் உன், தனது தந்தை கிம் ஜாங் இல் மற்றும் தாத்தா கிம் இல் சுங் போன்றே தனது அதிகாரத்தை சட்டப்பூர்வமாக்குகிறார். அவரது தந்தை மற்றும் தாத்தா இருவரும் 'மதிப்பிற்குரிய தந்தை' என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.


தனது தந்தை மற்றும் தாத்தாவைப்போலவே, கிம் ஜாங் உன் இனி ‘மரியாதைக்குரிய தந்தை’ என்று வடகொரிய இளைஞர்களால் அழைக்கப்படுவார். வட கொரியாவில் உள்ள இளைஞர்கள் இனி கிம் ஜாங் உன்னை "மதிப்பிற்குரிய தந்தை" என்று அழைக்க வேண்டும் என்ற உத்தரவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, இந்த ஆணை இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, அவர் மரியாதைக்குரியவர் என்று கருதவில்லை.


14 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 38 வயதான கிம் ஜாங் உன்னை, தந்தை என்றே அழைக்க வேண்டும் என்ற உத்தரவு மக்களுக்கு ரசிக்கவில்லை.38 வயது நிரம்பியவரை ‘அப்பா’ என்று அழைப்பது அபத்தமான விஷயம் என்று மக்களில் பலர் கருதுகின்றனர்.


கிம் ஜாங் உன்னீன் முன்னோடிகளுடன் ஒப்பிடும்போது, அவர் இன்னும் இளமையாகவும் அனுபவமற்றவராகவும் இருப்பதாக பலர் நினைக்கிறார்கள்.


மேலும் படிக்க | விழுப்புரம் விஷ சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை உயர்வு... போலீசாரின் அடுத்த ஆக்‌ஷன் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ