லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக டவர் நகரில் 18 வயதான இளைஞர் ஒருவர் கென்ட் பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து பயங்கரவாத அச்சுறுத்தல் பிரிவு மூத்த தேசிய ஒருங்கிணைப்பாளர் நீல் பாசு கூறுகையில் "இன்று காலை முதல் எங்கள் விசாரணையில் சந்தேகத்திற்கு ஆளான மேலும் சிலரை நாங்கள் கைது செய்துள்ளோம்," என்று தெரிவித்தார். 


லண்டன் சுரங்க ரயில் பாதையில் பக்கெட் குண்டு வெடித்ததில், 29 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.


இதுகுறித்து லண்டன் போலீசார் பயங்கரவாத சம்பவமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையினில் தற்போது இந்த கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது.